திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு?போலீசார் விசாரணை

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு?போலீசார் விசாரணை
X
திருச்சி காவிரி ஆற்றில் ஒருவர் மூழ்கி ஒருவர் உயிரிழந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள ஓயாமரி சுடுகாடு எதிர்புறம் காவிரி ஆற்றில் இன்று மதியம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தண்ணீரில் நடுப்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் கோட்டை போலீசார் மற்றும் கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

ஆனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினரும், போலீசாரும் திரும்பி சென்று விட்டனர். இது குறித்து யாரும் புகார் கொடுக்க வில்லை.

Tags

Next Story
ai in future agriculture