/* */

ஸ்ரீரங்கத்தில் கறிக்கடைக்கு தீ வைத்தவர் கைது

ஸ்ரீரங்கத்தில் கறிக்கடைக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் கறிக்கடைக்கு தீ வைத்தவர் கைது
X
ஸ்ரீரங்கம் காவல் நிலையம் (பைல் படம்).

ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர்உசேன். இவர் ஸ்ரீரங்கம் மீன் மார்க்கெட் பகுதியில் கறிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் அப்பாஸ் (வயது 25), சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த 31-ம் தேதி வீட்டு முன் நின்றிருந்த அப்பாஸை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் போதையில் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அப்பாஸ்க்கு வயிற்று வலி ஏற்பட்டதால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தந்தை ஜாகீர் உசேன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் போலீசார் வாலிபர் அப்பாஸை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 25), மோகன்ராஜ் (வயது 24) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (24) என்பவர் நண்பர்கள் சிறை சென்றதை தாங்க முடியாமல் நேற்று இரவு ஜாகிர்உசேனின் கறிக்கடையை தீ வைத்து எரித்தார். இதையடுத்து ராஜேஷை கைது செய்த ஸ்ரீரங்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 13 Jan 2022 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு