/* */

திருச்சி நகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவலம்

திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவல நிலை உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி நகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவலம்
X

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு ஆசாத் தெரு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடிசைப்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது.

மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் தண்ணீரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் திருச்சி அம்பிகாபுரம், பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Updated On: 24 Nov 2021 7:49 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...