/* */

இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை

இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி முதலமைச்சருக்கு திருச்சியில் இருந்து முதலீட்டாளர்கள் தபால் மூலம் மனுக்களை அனுப்பினர்.

HIGHLIGHTS

இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி முதலமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை
X

பணமோசடியில் ஏமாந்தவர்கள் முதல் அமைச்சருக்கு புகார் அனுப்புவதற்காக திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர்.

மக்களை ஏமாற்றி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த ஆயுசு நூறு நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பணத்தை இழந்து ஏமார்ந்த முதலீட்டாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ரிஜிஸ்டர் தபால் மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பணத்தை மீட்டுத்தரக் கோரியும், ஏமாற்றிய நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தபால் அனுப்பினர்.

இவர்கள் தபாலில் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி தில்லைநகர் பகுதியில் இயங்கி வந்த ஆயுசு நூறு என்ற நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் மளிகை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் நிலம் வாங்கி விற்பனை செய்வதாகவும், பயணம் என்ற செயலி மூலம் அனைத்து வித பயண வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆயுசு நூறு சார்பில் மளிகை கடைகள் திறக்க உள்ளதாக கூறி பொதுமக்களிடமிருந்து முதலீடாக ரூபாய் 1000 முதல் 50 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு தற்போது ஆயுசு நூறு நிறுவன உரிமையாளர்கள் ரூ.1000 கோடி பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

அவர்களிடம் தொழில் துவங்க முதலீடாக செலுத்திய பணத்தை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் சில தினங்களுக்கு முன் மனு கொடுத்திருந்தனர். அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆயுசு நூறு நிறுவனத்தின் மூலம் பணத்தை இழந்து ஏமாந்த முதலீட்டாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரிஜிஸ்டர் தபால் மூலம் தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின், தலைமை செயலாளர், அமைச்சர்கள், பாரதப் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் காவல்துறையினருக்கு தபால் அனுப்பினர்.

Updated On: 18 Oct 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...