/* */

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் 2 மகளுடன் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் தனது 2 மகள்களுடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் 2 மகளுடன் தீக்குளிக்க முயற்சி
X
தீக்குளிக்க முயன்ற பெரியசாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


தீக்குளிக்க முயன்ற பெரியசாமியின் மகளை போலீசார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தண்டலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). லாரி டிரைவராகவேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பெரியசாமி கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவர் தனது மனைவி சுதாவை கடத்தி சென்றதாக கூறி முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்ற போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறி இன்று காலை பெரியசாமி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அலுவலகம் முன்பு திடீரென தனது இரண்டு மகள்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதை அங்கு செய்தி சேகரிப்பதற்காக நின்றுகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர் அருணாச்சலம் ஆகியோர் பார்த்து உடனடியாக மண்ணெண்ணெய் கேனை தள்ளிவிட்டு மூன்று பேரையும் காப்பாற்றினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 11 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு