/* */

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.7.32 கோடிக்கு மது விற்பனை

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.7.32 கோடிக்கு மது பானம் விற்பனையாகி உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் நேற்று   ஒரே நாளில் ரூ.7.32 கோடிக்கு மது விற்பனை
X

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 187 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 105 மதுக்கடைகளில் பார் வசதி உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ. 3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடைபெறும். அதுவே பண்டிகை நாட்கள் கூடுதல் வருவாய் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கிடைக்கும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு ஆகிய பண்டிகை நாட்களில் ரூ. 4 கோடி முதல் ரூ.6 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் நேற்றே மதுப்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபாட்டிகளை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைக்க ஆரம்பித்தனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

ஒரு சில இடங்களில் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு விருப்பமான மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை வாங்கிச் சென்றனர். இன்று ஊரடங்கு என்பதால் நேற்று திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை விவரம் வருமாறு; தமிழகத்தில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ.218 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதன்படி சென்னை மண்டலம்- ரூ.50.04 கோடி, மதுரை மண்டலம்-ரூ.43.20 கோடி. திருச்சி மண்டலம்- ரூ.42.59 கோடி, கோவை மண்டலம்- ரூ.41.28 கோடி. சேலம் மண்டலம்- 40.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 Jan 2022 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு