/* */

திருச்சி கல்மந்தையில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு மீது புகார்

திருச்சி கல்மந்தை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

திருச்சி கல்மந்தையில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு மீது புகார்
X

திருச்சி கல்மந்தை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள தாராநல்லூர் கல்மந்தை காலனியில் கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் குடிசை வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தொடங்கப்பட்டது.

அப்போது அங்கு வாழ்ந்து வந்த 237 குடும்பங்களுக்கும் வீடுகளை ஒதுக்கி கொடுப்பதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் அந்த இடத்தில் 192 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கல்மந்தை காலனி பகுதியில் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த 64 குடும்பத்தினரிடம் ஒரு வீட்டிற்கு 63 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுக்கொண்டு, அவர்கள் மட்டும்குடியேறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் தரமற்று இருப்பதாகவும் கையில் சுரண்டினாலே அதன் சுவர்கள் பெயர்ந்து வருவதாகவும், இதனால் அந்த கட்டிடங்கள் இடிந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு உடனடியாக மராமத்து பணிகள் செய்து வீடுகளை உரியவர்களுக்கு விரைவாக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியில் குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி என்.ஐ.டி வல்லுனர் குழுவை கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அந்த குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில் அதை கட்டிய ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு குடியேற காத்திருக்கும் மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சியில் அதேபோல அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 12 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை