திருச்சி: காங்கிரசார் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சி: காங்கிரசார் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு
X
திருச்சியில் காங்கிரசார் முன்னாள் அமைச்சர் மறைந்த கக்கன் நினைவு தினத்தையொட்டி படத்திற்கு மாலை அணிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் மறைந்த தியாகி கக்கனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.

அவரது உருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர்கள் மலைக்கோட்டை முரளி, கள்ளர்தெரு குமார், திலகர், வெல்லமண்டி பாலு, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, மகளிரணி அஞ்சு, சேவா தளம் அப்துல் குத்தூஸ், இளைஞர் காங்கிரஸ் ரபீக், செந்தில்குமார், இர்பான், மன்சூர், பஜார் செந்தில், வாா்டு தலைவர் சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture