திருச்சி கோட்டை பகுதியில் ஐ.டி, நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி கோட்டை பகுதியில் ஐ.டி, நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி கோட்டை பகுதியில், ஐ.டி, நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள பெரிய செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் மகன் சரவணன் (வயது 29). இவர், ஒரு தனியார் ஐ.டி, கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் இருந்தபடியே இவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சரவணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கோட்டை போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story