திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்கு பதிவு
X

திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 29 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 62 ஆயிரத்து 432. இதில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் 11 மணி நிலவரப்படி ஆண்கள் 1 லட்சத்து 62 ஆயிரத்து 432 பேரும், பெண்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 778 பேர் என மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 213 பேர் வாக்களித்து உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 29 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது. திருச்சி மாநகராட்சியில் மட்டும் மொத்தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 2 லட்சத்து, 7 ஆயிரத்து, 719 பேர் வாக்களித்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business