/* */

3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

3 நாட்களுக்கு கனமழை: விவசாயிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு மழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்கள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

அறுவடை செய்து உலர்த்தி காயவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். மழைக்குப்பின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தங்களது நெல்லை கொண்டு சென்று விற்பனை செய்யலாம்.

மழையின் போது கால்நடைகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொண்டு மழையின் தாக்கத்தில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 5 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு