/* */

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இளம்பெண் பலி

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் பலியானார்.

HIGHLIGHTS

திருச்சியில் நடந்த சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி இளம்பெண் பலி
X

திருச்சி பெரியகடைவீதி, கள்ளத் தெருவை சேர்ந்த சங்கர் பாபு என்பவரின் மகள் நந்தினி (வயது 18). இவர் தனது இருசக்கர வாகனத்தில் காந்தி மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்தஅரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக நந்தினியின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நந்தினியை உடனடியாக திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால்அங்கு நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்துபுலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அரசுப் பேருந்தை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள சித்தாநத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 34)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தியஅரசு பேருந்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 2 Jan 2022 3:37 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...