/* */

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலி

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

HIGHLIGHTS

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலி
X

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி மார்க்கெட் வழியாக தீரன் நகருக்கு செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்று மத்திய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ஜங்ஷன் ரயில்வே ரவுண்டானா அருகே மெதுவாக சென்றது. அந்த வேளையில் ரயில் நிலையத்தில் இருந்து வேகமாக வந்த 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், பஸ்சின் பக்கவாட்டில் மோதி, பஸ்சின் அடியில் விழுந்தார்.

அப்போது பஸ்சின் பின்பக்க டயர், அந்த நபரின் தலையில் ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவப்பு நிற டி-சர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 5 Jan 2022 9:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!