திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம்!

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து 612 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த பழனி என்ற பயணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழனி தனது உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரது உடல், காலணிகள் மற்றும் பிற உடைகளில் மொத்தம் 612 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.37 லட்சத்து 58 ஆயிரம் ஆகும். பழனி மீது வழக்குப்பதிவு செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் அதிகரித்து வருவதை காட்டுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu