Begin typing your search above and press return to search.
திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் மர்ம சாவு
திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் மர்மமாக இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
திருச்சி உறையூர் வைக்கோல்காரத் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் ஜோதிகா (வயது 18). டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிக்கன் வாங்கி சமைத்து, சாப்பிட்டுள்ளனர். இதில் ஜோதிகாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீடு சென்ற ஜோதிகாவுக்கு நேற்று அதிகாலை மீண்டும் உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜோதிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிகா இறப்புக்கு, அவர் சாப்பிட்ட சிக்கன் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.