/* */

திருச்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி துவக்கம்

திருச்சி அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் இன்று தொடங்கியது.

HIGHLIGHTS

திருச்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ  கண்காட்சி துவக்கம்
X

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கண்காட்சியை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் இன்று தொடங்கியது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேசும்போது

மழை உரிய பருவ காலத்தில் பெய்யாததால் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் தினை, கம்பு உள்ளிட்டவற்றை விவசாயிகளால் முறையாக விளைவிக்க முடியவில்லை. சித்த மருத்துவம் நோய்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. பேராசிரியர் அன்பழகன், வீராச்சாமி போன்றோர் சித்த மருத்துவத்தை தான் உபயோகித்தார்கள். திருச்சி மாவட்டத்தில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையிலேயே இணைக்க முயற்சிக்கிறோம். அப்படி இல்லையென்றால் கூட்டத்தொடரில் மருத்துவ துறைக்கான மானிய கோரிக்கையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இன்று தொடங்கியுள்ள கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும். இந்த கண்காட்சியில் சித்த மருத்துவத்தில் உள்ள மருத்துவ பொருட்கள் அதனால் கிடைக்கும் பயன்கள், அரசு மருத்துவ மனையில் அளிக்கப்படும் சித்த மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Dec 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...