/* */

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 3 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு
X

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி, மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1347வது பிறந்த தினவிழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி ,தியாகராஜன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுதவிர அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ,கட்சிகள் சார்பிலும் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Updated On: 23 May 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு