விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு

விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு
X
திருச்சி விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பல்

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜமீர் (வயது 34). நகை வியாபாரி. இவரது நண்பர் துபாய் செல்வதால், அவரை ஜமீர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது விமான நிலையம் அருகே தனியார் சூப்பர் மார்க்கெட் பகுதியில் அவர் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர்.

இது குறித்து ஜமீர் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture