/* */

திருச்சியில் செல்போன் வழிப்பறி செய்த கும்பல் கைது

திருச்சியில் செல்போன் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் செல்போன் வழிப்பறி செய்த கும்பல் கைது
X

திருச்சி நகரில் செல்போன் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து செல்போன் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன் பலனாக திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் செல்போன்கள் வழிப்பறி செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா மற்றும் அரவிந்த குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது தவிர காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கோவையை சேர்ந்த வெங்கடேசன் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பவித்ரன் ஆகிய இருவரையும், மதுரையை சேர்ந்த லதா மற்றும் ராமு ஆகியோரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர் ‌‌.

மதுரையைச் சேர்ந்த ஜாக்கி, பிரசாந்த் ,திருச்சி பாலக்கரை சேர்ந்த சிவா ஆகியோரை கே.கே. நகரில் செல்போன் வழிப்பறி தொடர்பாக மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டன.

10 பேர் கொண்ட இந்த செல்போன் வழிப்பறி கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Updated On: 8 April 2022 2:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...