/* */

திருச்சி ஏர்போர்ட் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்: பொதுமக்கள் மறியல்

திருச்சி ஏர்போர்ட் அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி ஏர்போர்ட் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்: பொதுமக்கள் மறியல்
X

திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

திருச்சி, ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஜே.கே.நகர் மற்றும் லூர்து நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக, இந்தப் பகுதிகளில் 4 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதன் காரணமாக பலர் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மழை நின்ற பிறகும் தண்ணீர் வடியும் அளவு கொஞ்சம் கூட குறையாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஜே.கே.நகர் சாலை இணையும் பகுதியில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தாசில்தார் சேக் மஜித், திருச்சி மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவள்ளி, நிர்வாக பொறியாளர் குமரவேல் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஜே.கே. நகர் மற்றும் லூர்து நகர் பகுதிகளுக்கு வடிகாலாக விளங்கும் கொட்டப்பட்டு குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பி வருவதால் எதிர் திசையில் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாகவே இப்பகுதியில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது எனக் கூறியவர்கள், வடிகால்கள் ஆய்வு செய்யப்பட்டு 4 நாட்களுக்குள் முழுமையாக தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 27 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு