/* */

திருச்சியில் மூதாட்டியை ரப்பர் படகு மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சியில் மழைநீர் வடியாததால் வீட்டின் மாடியில் தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் மூதாட்டியை ரப்பர் படகு மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X

திருச்சி ஜே.கே. நகரில் மழை நீரால் சூழப்பட்ட வீட்டில்  இருந்து மூதாட்டியை தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளின் முன்பு தேங்கிய மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும், பெரும்பாலான சாலைகளும் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மீண்டும் பலத்த மழை பெய்தது. இதில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையே திருச்சி ஜே.கே.நகர் பகுதியில் ஒருவாரத்துக்கும் மேலாக மழைநீர் வடியவில்லை. இதனால் வயதானவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் முதல்மாடியில் தவித்த வள்ளியம்மாள் (வயது 95) என்ற மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டு கொண்டு வந்தனர்.

Updated On: 24 Nov 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு