திருச்சியில்,விவசாயிகள் 6-வது நாளாக எலியை கடித்து தொடர் உண்ணாவிரதம்

திருச்சியில்,விவசாயிகள் 6-வது நாளாக எலியை கடித்து தொடர் உண்ணாவிரதம்
X

திருச்சியில் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் எலியை கடித்தும், பிணம் போல் ஒருவரை உட்கார வைத்தும் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் 6-வது நாளாக இன்று விவசாயிகள் எலியை கடித்து நூதன முறையில்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் கடந்த 12-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வகையில் தங்களை வாட்டிக் கொண்டு உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் 6-வது நாளான இன்று காலை 9 மணிக்கு விவசாயிகள் உண்ண, உணவின்றி வயலில் கிடைக்கும் எலிகளை தின்றும், இறந்துபோன விவசாயிகளுக்கு பாடை கட்டியும் நூதன உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story