/* */

திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு

திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் ஜூலை 5-ம் தேதி விவசாயிகள் பச்சைத்துண்டு பேரணி- மாநாடு
X

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஐந்தாம் தேதி உழவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் உழவர் தினத்தை முன்னிட்டு ஜூலை ஐந்தாம் தேதி திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பாக பச்சைத்துண்டு பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த பேரணியானது ஜூலை ஐந்தாம் தேதி பிற்பகல் மூன்று மணி அளவில் திருச்சி சாஸ்திரி சாலை மெகா ஸ்டார் திரையரங்கம் அருகில் இருந்து புறப்பட்டு தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தையை அடையும். பின்னர் அங்கு மாநில அளவிலான மாநாடு தொடங்கி நடைபெறும்.

இந்த மாநாட்டில் வங்கி கடன் ரத்து, விளைபொருட்களுக்கு உரிய விலை கோருதல், நீர்வழி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

மாநாட்டிற்கு மாநில தலைவர் பேராசிரியர் சின்னச்சாமி தலைமை தாங்குகிறார். திருச்சி மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை வரவேற்று பேசுகிறார். தீட்சிதர் பா. வழக்கறிஞர் கென்னடி முன்னிலை வகிக்கிறார்கள். மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

Updated On: 17 Jun 2022 12:07 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு