/* */

திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரதம்

திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் விவசாயிகள் 4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் உண்ணாவிரதம்
X

திருச்சியில் விவசாயிகள் நான்காவது நாளாக மண்டை ஓடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும்.மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர் பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்சங்கம் சார்பில் திருச்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு போலீசில் அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் போலீசார் இந்த உண்ணா விரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வில்லை.இதைதொடர்ந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலதலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகர் திருச்சி-கரூர் பைபாஸ் ரோட்டில், மலர்சாலையில் உள்ள அவரது வீட்டில்உண்ணா விரத போராட்டத்தை கடந்த12-ஆம் தேதி தொடங்கினர்.

நவம்பர் 26-ஆம் தேதி வரை 46நாட்கள் இந்த உண்ணா விரதபோராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில்4-வது நாளாக இன்று மனித மண்டை ஓடுகளை கையில் ஏந்தி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  4. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  5. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  6. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  7. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  8. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!