திருச்சி அருகே கத்தியை காட்டி வியாபாரியிடம் பணம் பறிப்பு: பிரபல ரவுடி கைது

திருச்சி அருகே கத்தியை காட்டி வியாபாரியிடம் பணம் பறிப்பு: பிரபல ரவுடி கைது
X

மாதிரி படம் 

திருச்சி அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் ஆசாத்நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) துப்பாக்கி ரமேஷ் (வயது 52). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில், பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் நேற்று காஜாப்பேட்டையில் உள்ள பெட்டிக்கடையில் ஜெயகுமார் (வயது 38) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத ஜெயகுமார், இதுகுறித்து பாலக்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து ரவுடி துப்பாக்கி ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story