திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்  குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு
X
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்தது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40). கூலி தொழிலாளியான இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஏற்பட்ட குடும்ப தகராறில் பாக்கியலட்சுமி தனது உடலில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த பாக்கியலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாக்கியலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் நேரில் சென்று மரண வாக்குமூலம் பெற்றுள்ளார்.

Tags

Next Story