/* */

வியாபாரியிடம் கத்தியைக் காட்டி செல்போன்- பணம் பறித்த 4 பேர் கைது

திருச்சியில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி செல்போன்- பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வியாபாரியிடம் கத்தியைக் காட்டி செல்போன்- பணம் பறித்த 4 பேர் கைது
X

திருச்சி பெரிய கடை வீதி சின்ன கம்மாள தெருவைச் சேர்ந்தவர் மணி (வயது 49). வியாபாரியான இவர் நேற்று முன்தினம் சின்ன கம்மாள தெரு பகுதியில் உள்ள ஒரு கடை அருகே சென்றபோது எதிரே வந்த நான்கு பேர் மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறித்து சென்றதாக மணி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் மணியிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த காட்சியை வைத்து தாராநல்லூர் சுரேஷ் பங்களாவை சேர்ந்த வீரபாண்டி (வயது 20), உப்பிலிய தெருவைச் சேர்ந்த பிரபு என்கிற பிரபாகரன் (வயது 19), பூண்டுக்கார தெருவைச் சேர்ந்த சந்துரு என்கிற சந்திரமோகன் (வயது 20), தாராநல்லூரை சேர்ந்த வாசுதேவன் (வயது 19) ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 Nov 2021 4:50 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...