/* */

திருச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு

திருச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனாா தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில்  கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் தூர்வாரும் பணி ஆய்வு
X

திருச்சியில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் தூர்வாரும் பணிகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வாய்க்கால், ஆறு, தூர்வாரும் பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக அரசின் நீர்வளத்துறை ஆதார அமைப்பின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமை தாங்கினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் 3 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வாய்க்கால் ஏரி தூர்வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ. 80 கோடி மதிப்பீட்டில் 4,694 கிலோ மீட்டர் நீளம் வாய்க்கால்கள் தூர்வாரப்படுகிறது. குறிப்பாக காவிரி பாசனப் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும் போது கடைமடை பகுதிவரை தண்ணீர் தங்குதடையின்றி செல்வதற்காக இந்த நடவடிக்கை முதலமைச்சரின் உத்தரவு படி எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

பேட்டியின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் எஸ். ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 26 April 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...