திருச்சி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை -பணம் கொள்ளை

திருச்சி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை -பணம் கொள்ளை
X
திருச்சி அருகே நவல்பட்டு அண்ணாநகரில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை -பணம் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை பணம் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது துவாக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த நாள் அவர்கள் ஊர் திருப்பினர். பின்னர் வீட்டிற்கு சென்ற போது முன்பக்க கதவு போட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த மூன்றரைப் பவுன் நகை, ரூ.2000 ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் துப்பறியும்மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டின் பல பகுதிகளில் சுற்றி பார்த்த மோப்ப நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது தொடர்பாக நவல்பட்டு போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
ai solutions for small business