திருச்சியில் என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

திருச்சியில் என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை
திருச்சியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி உறையூர் அண்ணாமலை நகர், மலர் சாலையை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அஸ்வின் சாம்ராட் (வயது 21). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வேலை தேடி வந்தார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அஸ்வின் சாம்ராட் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின் சாம்ராட்டின் தற்கொலைக்கான காரணம் குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், திருச்சி மாம்பழசாலை ஓம் சக்தி மாரியம்மன் கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story