/* */

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று பேசினார்.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (05.04.2024) தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

இந்தியத் தேர;தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து, நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் இன்று (05.04.2024) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் டோலாஸ் செவிதிறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள காதுகேளாதோருக்கான மற்றும் வாய்பேச இயலாதோருக்கான மாதிரி வாக்குச்சாவடி மையத்தையும் அதன் செயல் விளக்க முறைகளையும்;நேரில் பார்வையிட்டார். மேலும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாற்றுத்திறன் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள், கோலங்கள் மற்றும் வினாடி - வினா நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டு வாக்காளர்விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற தேர்தலில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் விழி;ப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவீதம்; வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவா;கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, வாக்காளர்களுக்கு விழிப்புணா;வு ஏற்படுத்தும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்க பதாகையில் கையெழுத்திட்டும், தேர்தல் ஆணைய இலட்சினை வடிவில் மற்றும் ஏழவந100சதவீதம் எனும் வடிவில் மாணவா;களின் விழிப்புணா;வு ஏற்படுத்தும் நிகழ்;வினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

மேலும் தேர்தல் விழி;ப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும், குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிப்பதுடன், வாக்களிப்பதன் அவசியத்தை உங்களின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எடுத்துரைத்து அவர்களையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என தெரிவித்து, மாணவர்களின் தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பதிலளித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில். துணை ஆட்சியர் வேலுமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரமோகன், உதவி திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 April 2024 5:08 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  2. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  3. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  4. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  6. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  7. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  8. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  9. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  10. நாமக்கல்
    டூரிஸ்ட் பர்மிட் பஸ்களை பயணிகள் பஸ்களாக இயக்குவது நியாமற்ற...