திருச்சியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
X
பைல் படம்.
By - Harishpriyan, Reporter |26 Oct 2021 5:00 PM IST
திருச்சியில் முதியவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மதுரை ரோடு, குப்பாங்குளம் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 66). இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது நாகேந்திரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தில்லை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu