/* */

திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
X

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை மேலகிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 50). இவரது நண்பர் அதே பகுதி மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் மணி(எ)சுப்ரமணி (வயது 52). இருவரும் கூலித்தொழிலாளர்கள். இதில் சம்பவத்தன்று இரவு மது போதையில் இருந்த இருவரும் அப்பகுதியில் உள்ள அரிசி கடை முன் பிளாட்பாரத்தில் உறங்க சென்றனர்.

அப்போது இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பானது. அப்போது மணி மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் முத்துகுமாரை குத்தினார். இதில் இடப்புற தலையில் காயமடைந்த முத்துகுமார், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மணியை கைது செய்தார்.

Updated On: 24 Nov 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு