Begin typing your search above and press return to search.
திருச்சி சரகத்தில் அதிரடி சோதனை: 245 வழக்கு பதிவு - 243 பேர் கைது
போதை மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பாக, திருச்சி சரகத்தில் நடைபெற்ற சோதனையில், 245 வழக்குகள் பதிந்து, 243 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுரையின் பேரில், திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் ( Gutkha ) சம்மந்தமாக கடந்த 2,ஆம் தேதி, சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில், திருச்சி சரகத்தில் மொத்தம் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ( திருச்சி -84 , புதுக்கோட்டை 43 , கரூர் -33 , பெரம்பலூர் -23 மற்றும் அரியலூர் -62 ) பதிவு செய்யப்பட்டு, 243 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 573 மதிப்புள்ள, சுமார் 93.500 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன