/* */

லாரி மோதி இளைஞர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

லாரி மோதி இளைஞர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

லாரி மோதி இளைஞர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை
X

திருச்சி நீதிமன்றம் (பைல் படம்)

திருச்சி மாவட்டம் லால்குடி பக்கம் உள்ள திருமண மேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் மருதை (வயது28).இவர் கடந்த 31 -1 -2018 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி டூவீலர் மீது மோதியது .இதில் மருதை படுகாயமுற்று உயிரிழந்தார். திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் காரமடையைச் சேர்ந்த ஆனந்தன் (31) என்பவரை கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு இரண்டு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

இதே கோர்ட்டில் நடைபெற்ற இன்னொரு விபத்து தொடர்பான வழக்கில் இறந்தவர் இருளப்பன்( வயது 65). திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் சென்ற போது பெரம்பலூர் மாவட்டம் பொம்மனப்பட்டியை சேர்ந்த குருச்சந்திரன் (31) என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குரு சந்திரனுக்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

Updated On: 28 July 2022 1:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு