திருச்சி மாநகராட்சி பகுதியில் 14 ம்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் 14 ம்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
திருச்சி மாநகராட்சி பகுதியில் 14 ம்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.09.2024 அன்று நடைபெற இருப்பதால், திருச்சி மாநகர பகுதியில் குடிநீர் விநியோகம் 14.09.2024 ஒரு நாள் மட்டும் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.09.2024 அன்று நடைபெற இருப்பதால், மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது,சுந்தராஜபுரம் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B காலனி, காஜாமலை பழையது, ரெங்காநகர், சுப்ரமணிய நகர், புதியது, வி.என். நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவிபாரதிநகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல்நகர் புதியது, தென்றல் நகர் பழையது, அரியமங்கலம் கிராமம், மலையப்பநகர் புதியது,மலையப்பநகர் பழையது,ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது, முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது,முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, M.K .கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மைவீதி, M.K கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது,பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்தர் நகர், LIC புதியது, கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்நகர், சுப்ரமணிய நகர் , சத்தியவாணி கே கேநகர், அம்மா மண்டபம், AIBEA நகர், பாலாஜி அவின்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர் , T.V கோவில், உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் சிவா நகர் , புத்தூர் ஆனந்தம் நகர், மற்றும் Rainbow நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 14.09.2024 ஒரு நாள் இருக்காது.

15.09.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags

Next Story