திருச்சி ஓட்டலில் தகராறு செய்து தோசைக்கல்லை உடைத்த 3 பேர் கைது

திருச்சி ஓட்டலில் தகராறு செய்து தோசைக்கல்லை உடைத்த 3 பேர் கைது
X

திருச்சி தில்லைநகர் காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி ஓட்டலில் தகராறு செய்து தோசைக்கல்லை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி தென்னூர் ஹிதாயத் நகரை சேர்ந்தவர் மீரான் மொய்தீன் (வயது49). இவர் தென்னூர் சின்னச்சாமி நகர் அருகே நேரு நகரில் டிபன்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு தென்னூர் புதுமாரியம்மன் கோவில் மேட்டுத்தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 27), ஜெயயால் (வயது 26), குமரேசன் (வயது 24) ஆகியோர் குடிபோதையில் வந்து தகராறு செய்துள்ளனர்.

இதனை மீரான்மொய்தீன் தட்டிக் கேட்கவே, அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கிருந்த தோசைக்கல்லை உடைத்துசேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் திருச்சி தில்லைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், ஜெயபால், குமரேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story