/* */

திருச்சி மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்றியது தி.மு.க.

திருச்சி மாநகராட்சியை முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட 47 வார்டுகளில் 33ல் வெற்றி பெற்றுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சியை முதல் முறையாக கைப்பற்றியது தி.மு.க.
X

திருச்சி மாநகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற 65 வார்டுகளிலும் வாக்கு எண்ணும் பணி வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. கோட்டம் வாரியாக 4 இடங்களில் நடந்து வருகிறது.

இதுவரை 47 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில் தி.மு.க. 33வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 5இடங்களிலும், அ.தி.மு.க, ம.தி.மு.க. தலா 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அ.ம.மு.க, ம.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதன் மூலம் அறுதி பெரும்பான்மை பெற்று திருச்சி மாநகராட்சி தி.மு.க. மேயர் பதவியை கைப்பற்றி உள்ளது. திருச்சி மாநகராட்சியின் 28 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தி.மு.க. கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Feb 2022 10:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...