திருச்சி மறை மாவட்ட ஆயரிடம் ஆசீர்வாதம் பெற்றார் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ்

திருச்சி மறை மாவட்ட ஆயரிடம் ஆசீர்வாதம் பெற்றார் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ்
X

திருச்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜுக்கு பிஷப் ஆரோக்கியராஜ் ஆசீர் வாதம் வழங்கினார்.

திருச்சி மறை மாவட்ட ஆயரிடம் ஆசீர்வாதம் பெற்றார் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜ்

திருச்சி மாநகராட்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளராக டி. புஷ்பராஜ் போட்டியிடுகிறார். அவர் தனது வார்டில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து நாள் தோறும் ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு பல்வேறு சமூக நல சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வியாபார சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வேட்பாளர் புஷ்பராஜ் திருச்சி மறை மாவட்ட ஆயர் (பிஷப்) எஸ். ஆரோக்கியராஜை சந்தித்து சந்தன மாலை அணிவித்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது அவருக்கு பிஷப் தேர்தலில் பெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture