/* */

திருச்சியில் மக்கள் சக்தி இயக்க ஆண்டு விழாவில் மரக்கன்றுகள் வினியோகம்

திருச்சியில் நடந்த மக்கள் சக்தி இயக்க ஆண்டு விழாவில் மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் மக்கள் சக்தி இயக்க ஆண்டு விழாவில் மரக்கன்றுகள் வினியோகம்
X

விழாவில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மக்கள் சக்தியை இயக்கமாக்கிய வரலாற்றுப் பெருமை டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தியை சாரும்.1988-ஆம் ஆண்டு மே. 29-ஆம் நாள் மக்கள் சக்தி இயக்கத்தை அவர் துவக்கினார்.

சுயவளர்ச்சி, சுயபொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய ஈடுபாடு என்ற லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இது எனது கிராமம், எனது நாடு என்ற உணர்வோடு நேர்மையான வழியில் கடமை உணர்வோடு ஒவ்வொருவரும் ஆக்க பூர்வமான மனமாற்றத்திற்காக, சமுதாய முன்னேற்றத்திற்காக, பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் சக்தி இயக்கம் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

மக்கள் சக்தி இயக்கத்தின் 36 வது தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா பொன்மலையடிவாரம் பகுதியில் நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகிகள் ஆர்.கே.ராஜா,குமரன் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடந்தது.

மரங்கள் மலர்கள், காய், கனிகள் தருகிறது. நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது.காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.

மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன. ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

இத்தகைய சிறப்புக்குரிய மரங்களை ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் வளர்க்க வேண்டும் என்பதற்காக விழாவிற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் சந்திரசேகர், வெங்கடேஷ், துரை வண்ணன், ரவி, சுந்தர் மற்றும் பல கலந்து கொண்டு மரக்கன்றுகள் எடுத்துச் சென்றார்.

Updated On: 28 May 2023 12:07 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...