திருச்சியில் ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர் எம்.பி- 150 பேர் மீது வழக்கு
திருச்சியில் திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே இன்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்,பி, திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவகர், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மூத்த நிர்வாகி சுப. சோமு, மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாததால் கோட்டை போலீசார் திருநாவுக்கரசர் எம். பி. 25 பெண்கள் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu