/* */

சொர்க்கவாசல் திறப்பு: டிச. 14-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் சொர்க்கவாசல் திறப்பான டிச. 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சொர்க்கவாசல் திறப்பு: டிச. 14-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அலங்காரங்களில் உற்சவர் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு (பரமபதவாசல் திறப்பு) வருகிற 14-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் தமிழ் நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறை நாளில் அரசின் அனைத்து துணை கருவூலங் களும், மாவட்ட கருவூலங்களும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Dec 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு