/* */

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் சாவு

திருச்சியில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற முன்னாள் கவுன்சிலர் மகன் சாவு
X
பைல் படம்.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் பிச்சை. முன்னாள் கவுன்சிலரான இவரது மகன் ஆசிக் (வயது 19).

இவர் கடந்த மாதம் திருச்சி கோர்ட்டு அருகே தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் இருந்த மணலில் திடீரென சறுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் ஆசிக்கின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...