Begin typing your search above and press return to search.
திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் கார் மின்கம்பத்தில் மோதி விபத்து
திருச்சியில் ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் கார் ரோட்டின் ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் ஒருவர் இன்று காலை திருச்சிக்கு வந்துள்ளார். வெளியூர் சென்ற அவரை திருச்சி ரயில் நிலையத்தில் விட்டு, விட்டு டிரைவர் மட்டும் காரில் திரும்பினார். அந்த காரை டிரைவர் சிவக்குமார் (வயது 35) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
கார் சத்திரம் பஸ் நிலையம் சென்ற போது ரோட்டின் குறுக்கே திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க வேண்டி சிவகுமார் காரை இடது புறமாக திருப்பினார்.அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரத்தில் உள்ள இருசக்கர வாகனத்தின் மீது இடித்து, அங்கு உள்ள வணிக வளாகத்தின் படியில் மோதி, பின்னர் மின்கம்பத்தில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.