திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 275 பேருக்கு கொரோனோ தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 275 பேருக்கு கொரோனோ தொற்று
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 275 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரேநாளில் 275 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனா தொற்று பாதிப்புடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணம் அடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 79 ஆயிரத்து 863 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1104 ஆகவும் உள்ளது.

Tags

Next Story