/* */

திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் கொரோனா பாதிப்பு: ஒருவர் பலி

திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 3,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் கொரோனா பாதிப்பு: ஒருவர் பலி
X

பைல் படம்.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் அவதிபட்டு வருகிறது. இதில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முககவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையில் ஒமிக்ரான் நோய்தொற்று பரவி வருவதாக சுகாதாரதுறை தெரிவித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமான மழை பெய்தது. தொடர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக பனியும் அதிகமாக பெய்து வருகிறது. இதற்கிடையே கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 271 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 3,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்