/* */

திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு

திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்கும் வகையில் விரைவு படுத்தப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

ஒமிக்ரான் வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலயங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கட்டணமாக ரூ.700 நிர்ணயம் செய்யப்பட்டு பயணிகளிடம் வசூ லிக்கப்படுகிறது.

இதன் முடிவுகள் வருவதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. அதுவரை பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும். இதனை விரைவுபடுத்தும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் ராபிட் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சோதனை முடிவுகள் சுமார் ஒரு மணி நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு கட்டணமாக ரூ.1,370 நிர்ணயம் செய்யப்பட்டு பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனைக்கு இந்தியாவிலேயே திருச்சியில் தான் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 9 Dec 2021 9:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!