/* */

தொடர் மழை: பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவராசு அறிவிப்பு

தொடர் மழை - பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவராசு அறிவிப்பு.

HIGHLIGHTS

தொடர் மழை: பொது மக்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் சிவராசு அறிவிப்பு
X

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் 90 சதவீத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும் .தாழ்வான பகுதிகளிலும் , நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மழை, வெள்ளம் நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது . வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் .பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் .

நீர்விழ்ச்சிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

பேரிடர் காலங்களில் மெழுகுவத்தி மற்றும் தீப்பெட்டி ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ( உணவு வகைகள் ) எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மருந்து மற்றும் பால் பவுடர் மின்விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள் சுகாதாரத்தை பேணிக் காக்க தேவையான பொருட்கள் முகக் கவசங்கள் பொதுமக்கள் அனைவரும் கைவசம் வைத்திருக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 8 Nov 2021 3:23 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...