/* */

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் விற்பனைக்காக வைத்திருந்த கிளி குஞ்சுகள் பறிமுதல்
X
திருச்சியில் வனத்துறை பறிமுதல் செய்யப்பட்ட கிளிகுஞ்சுகள்.

திருச்சி பாலக்கரை எடத்தெரு கீழபடையாட்சி தெரு அருகிலுள்ள குருவிகார தெருவில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட அந்த வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 500-க்கும் மேற்பட்ட பச்சைக்கிளி குஞ்சுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இது போல் நூற்றுக் கணக்கில் பலவகையான குருவி குஞ்சுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிளி மற்றும் குருவி குஞ்சுகளை வனத்துறையினர் மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த வீட்டில் பல ஆண்டுகளாக பறவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 14 March 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்