Begin typing your search above and press return to search.
கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
HIGHLIGHTS
திருச்சி வயலுார் ரோட்டில் உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார் . பின்னர் பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார் .
இந்நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் உதவி ஆணையர் செல்வபாலாஜி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, முன்னாள் துணை மேயர் அன்பழகன் அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.